ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

பெப்ரவரி 8, 2008

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, வத்தளையில ஒரு இருபது, இருபத்தைந்து வயது இளம் ஆண்.. பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார்.

பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை.

a

மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம் காட்டுகின்றன

s

எல்லாம் நல்லது தான் ஆபீசர், இந்தியாவுல இதுகளையெல்லாம் கொண்டு வந்துடாதீங்க. வைத்தியசாலைகளில் எண்ணை தயாரிக்கவும், பசங்களுக்கு ஈக்கில் வைத்து பிடிக்கவும், குறிபார்த்துக் கல்லெறியவும் தான் ஓணான்கள் பயன்படுகின்றன இங்கே.


வாங்கோ வாங்கோ

செப்டம்பர் 4, 2007

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாய பீட முன்னாள் மாணவரான தேவா அவர்கள், தனது சக மாணவர்கள் பயன்பெற புதிய சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளார். விரைவில் இலங்கை பூராவும் இதனை அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் அவர் உள்ளார். வாங்க வந்து பயன் பெறுங்க.


இம்சை அரசன் 23-ம் தேவசுப்பிரமணியம் 30-ம் தேவசுப்பிரமணியம் ஆன கதை

ஆகஸ்ட் 26, 2007

இம்சை அரசன் 23-ம் தேவசுப்பிரமணியம் அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
சேவகன் கட்டியம் கூறுகிறான்.

”ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் தேவசுப்பிரமணியம் பராக் பராக்” தேவசுப்பிரமணியம்:- ,”அடேய் நிறுத்து நிறுத்து என்ன சொன்னாய் மறுபடி சொல் பார்ப்போம்
சேவகன்:- நடுங்கியபடியே,;;மன்னா சரியாகத்தானே சொன்னேன்.சென்ற முறை தப்பாகச் சொன்னதற்கு தண்டனையளித்தீர்கள். அதற்குப் பின் தினமும் 25 முறை வீட்டுப் பாடம் போல் எழுதி எழுதி படித்து விட்டுத்தான் வேலைக்கே வருகிறேன் மன்னா
தேவசுப்பிரமணியம்:-அடேய் என்னையா எதிர்த்துப் பேசுகிறாய் இன்னொருமுறை சொல்
சேவகன்:-
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் தேவசுப்பிரமணியம் பராக் பராக்என்றதும்
தேவசுப்பிரமணியம்:-நிறுத்து இனி 23 தேவசுப்பிரமணியம் என்பதை 30 என மாத்திச்சொல்லு தெரிகிறதா அப்படியே 30 முறை எழுதிபழகு.”
தேவசுப்பிரமணியம்:-லகுடபாண்டி,’

லகுடபாண்டி:-மன்னா””என்னா
தாங்கள் 23 தானே எப்போது எனக்குத் தெரியாமல் 30 ஆக மாறினீர்கள்

தேவசுப்பிரமணியம்:-நீ கேட்ட உடனே சொல்ல வேண்டுமா நான் மன்னனா நீயாஎன முறைக்க,
சரி சரி கோபப் படாதீர்கள்

இருவரும் அரசபைக்கு வருகிறார்கள்.

லகுட பாண்டி:-திடீரென்று ஏன் சபை கூட்டுகிறீர்கள் மன்னா.இது உங்கள் ஓய்வுக்காலம் அல்லவா? ராணிகளுடன் நீங்கள் [கண்ராவி] டூயட் பாட வேண்டிய நேரத்தில்? எதிரி நாட்டான் யாரும் படையெடுத்து வருகிறார்களா?”
தேவசுப்பிரமணியம்:-,அமைச்சா நான் சில முக்கிய தீர்மானங்கள் போட இருக்கிறேன் அதற்குத்தான் இந்த அவசர கூட்டம்
நம் சபையில் எத்தனை அமைச்சர்கள்

லகுட பாண்டி:-தலைமை அமைச்சனான என்னையும் சேர்த்து 36 பேர் மன்னா
தேவசுப்பிரமணியம்:-,உடனே 6 பேரை பதி நீக்கம் செய்து 30 ஆக மாற்றும்
லகுட பாண்டி:-’மன்னா ஏன்…”
தேவசுப்பிரமணியம்:-,ஹூம் கேள்வி கேட்காதே. அது சரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்
லகுட பாண்டி:-சில 32 ,30,28 இப்படி
தேவசுப்பிரமணியம்:-,சரி எல்லாவற்றையும் 30 ஆக்கு.
இனி எல்லாம் 30 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.

லகுட பாண்டி:-ஆமாம் இந்த இலக்கியங்கள் எப்படி
,”
இன்னா நாற்பது,இனியவை நாற்பது
…..”
தேவசுப்பிரமணியம்:-”நிறுத்து இனி அவை இன்னா 30,இனியவை 30 ஆக வழங்கப்படும்.
ஆமா இந்த திருக்குறள்
?”
லகுட பாண்டி:-”133 அதிகாரம் மன்னா
அதையும்
…”
மன்னா வேண்டாம் அது தெய்வப் பொதுமறை அதில் கை வைக்காதீர்கள்
.
அதிகாரத்துக்கு 10 வீதம் 1330 உள்ளதுஎன்று லகுட பண்டி 30 அழுத்திச் சொல்ல

தேவசுப்பிரமணியம்:-சரி சரி இருந்து விட்டு போகட்டும்

சபையின் மத்தியிலிருந்து ஒரு குரல் வருகிறதுஅரசே உம்ம அந்தப்புரத்தில் ராணிகள் எத்தனை பேர்
தேவசுப்பிரமணியம்:-”ஆஹா..ஆஹா நல்ல நேரத்தில் கேட்டாயடா எந்தங்கமே என் மூன்னால் வா மகனே
லகுட பாண்டி இந்த பண்டிதனுக்கு தகுந்த சன்மானம் கொடு.அப்படியே ராணிகள் எண்ணிக்கையை சொல்லு;;
லகுட பாண்டி:-”26 மன்னா
தேவசுப்பிரமணியம்:-”உடனடியாக இன்னும் 4 வருக்கு ஏற்பாடு செய்யும்
லகுட பாண்டி:-”மன்னா இப்போதாவது கேட்கலாமா
தேவசுப்பிரமணியம்:-”கேள்
லகுட பாண்டி:-”திடீர்ரென்று உங்களுக்கு ஏன் 30 மேல் மோகம்
தேவசுப்பிரமணியம்:-”ஹூம் இப்போது 30 மட்டும்தான் மீண்டும் 50 ஆகக் கூட மாறும். எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்.ஹாஹா என்று சிரித்தபடீமீசையில் இருபக்கமும் மல்லிகையை சொருகுகிறார்.


ேதவா ரசிகர் மன்ற ெகாழும்புக்கிளை அங்குரார்ப்பணம்

ஆகஸ்ட் 24, 2007

ேதவா ரசிகர் மன்றக் ெகாழும்புக்கிளை இன்று மிக ேகாலாகலமாக அங்குரார்ப்பணம் ெசய்து   ைவக்கப்பட்டுள்ளது. இதன் தலைவர் ெசயலாளர் மற்றும் ெபாருளாளர் ேபான்ற அைனத்து பதவிகளையும் ேதவா புகழ் பிருதி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். (இவர் முன்னர் பள்ளிக்காலத்தில் ேதவாவின்  வலதுகரமாக இயங்கி ேதவாவிற்கு இைணயாக பலரிடமும் அடிவாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இனி இப்பதிவில் எல்லாம் வல்ல ேதவா அவர்களுக்கு இைணயாக அவர் புகழ் பரப்பும் பிருதி அவர்களைப்பற்றியும் பதிவுகள் ெதாடர்ச்சியாக இடம் ெபறும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

கணினி அரட்டையில் உலகப்புகழ் ெபற்ற இவரது பல்வேறு அனபவங்களை நீங்கள் ேநரடியாக மிக விரைவில் ெவளிவிடப்பட இருக்கும் அவரது ேபட்டி மூலம் அறிந்து ெகாள்ள முடியும். பதவி ஏற்றுக் ெகாண்ட உடனேேய ேதடி வந்து அலுப்புக் குடுத்து ேபட்டி தந்த பிருதி அவர்களுக்கு ேதவா யாழ் ரசிகர் மன்றம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.

இவரது பல் ேவறு முகங்களையும் நீங்கள் இவரது பதியப்பட இருக்கும் புகைப்படங்கள் மூலம் கண்டு ரசிக்க இயலும். இன்று இரண்டு மட்டுமே.

இவ்வண்ணம்,
ெஜயந்தன் (கதா),
ேதவா ரசிகர் மன்றம்,
யாழ் கிளை.
untitled-2.jpg

kani.jpg


நானும் அன்னதானமும்.

ஆகஸ்ட் 23, 2007

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலே எனது முக்கிய ேவலைகளில் ஒன்றாக இருந்தது அன்னதானங்களிலே ெசன்று சாப்பிடுவது. இதற்காகவே விடியற்காலையில் தினசரிகளை உருட்டி பிரட்டி எங்கெங்கு அன்னதானம் ேபாடுகிறார்கள் என்று பார்த்து அங்கு ெசன்றுவிடுவேன். இதற்காக எனது நண்பர்கள் பலர் என்னை நக்கல் அடித்தாலும் நான் அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. (சூடு சுரணை இருந்தாத்தாேன).

இவ்வாறாக எனது பழங்கதை இருக்க இப் ேபாது நான் எனது இந்த பதிவை பிரபலப்படுத்த எனது யாழ் ரசிகர் மன்றம் ஊடாக நல்லூர்க் கந்தனருகில் அன்னதானம் ெசய்கின்றேன். வாங் ேகா….    வாங் ேகா…..



நேர்காணல் ஒலிப்பேழை பாகம்-2

ஆகஸ்ட் 23, 2007

tttt

தேவாரசிகர் மன்றதிற்கு தேவா அளித்த பிரத்தியேக நேர்காணல் பாகம்-2  விரைவில் வெளிவரும்.

நன்றி-தேவாரசிகர் மன்றம் யாழ்ப்பாணம்


நேர்காணல் ஒலிப்பேழை

ஆகஸ்ட் 20, 2007

தேவாரசிகர் மன்றதிற்கு தேவா அளித்த பிரத்தியேக நேர்காணல்

நன்றி-தேவாரசிகர் மன்றம் யாழ்ப்பாணம்


தேவா விற்ற முறுக்கு

ஆகஸ்ட் 20, 2007

தேவா விற்ற முறுக்கு சின்னக்கற்பனை

தேவா முறுக்கு டின்னை சைக்கிளில் கட்டிக்கொண்டு ஓட்டியபடி, ஒரு குறுக்கு சந்தில் கூவிக் கொண்டே வருகிறார்…தேவா : முறுக்கு முறுக்கு … அம்மா முறுக்கு முறுக்கு … தம்பி முறுக்கு முறுக்கு … அரிசி முறுக்கு … நெய் முறுக்கு … ஐயா வாங்குங்க அம்மா வாங்குங்க … ஆத்தா பாத்து பாத்து செஞ்ச கைமுறுக்கு…திடிரென்று சைக்கிள் பஞ்சராக, சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்துகிறார்.அந்த நேரம் பார்த்து விசிலடித்துக் கொண்டே சைக்கிளில் வரும் ஜெயந்தன் தேவாவை பார்த்துவிடுகிறார். அதை தேவா கவனித்துவிட்டு, பார்க்காதது போல் குனிந்து சைக்கிள் டயரை சீரியசாக பார்கிறார்.நிதானமாக சைக்கிளில் இருந்து இறங்கிய ஜெயந்தன், கிடை ஆடு தனியாக மாட்டிய சந்தோசத்தில் தேவாவிடம் பேச்சு கொடுக்கிறார்.

ஜெயந்தன் : தேவா ?
தேவா : ய்ய…யாருப்பா நீ …. என்று பார்க்காத்தது போல் இழுத்துவிட்டு …. நீ…..யா ?
ஜெயந்தன் : சரி நான் தான் இருக்கட்டும் … நீ எப்படி இங்க …
தேவா : ம் … சைக்கிளுக்கு டயரு இருக்கான்னு பாக்கிறேன் … நீ கொஞ்சம் பாத்துதான் சொல்றது
ஜெயந்தன் : மிஸ்டர் தேவா நீங்க என்னை தப்பா நெனெச்சுக்கிட்டு இருக்கிங்க …

கெஞ்சியபடி …
தேவா : யப்பா யப்பா நான் ஒன்னும் தப்பா நினைக்கிலப்பா, என்ன உடு … நீ எதுக்கு இங்க வந்தே ?
ஜெயந்தன் : எனக்கு மாடுவாங்க பணம் கொடுத்தெ இல்லெ … அத …
தேவா : குடு .. குடு … சீக்கிரமா குடுத்துட்டு போப்பா … யப்பா…. யப்பா ஒன்ன தப்பு தப்பா நினெச்சிட்டேம்பா.
தேவா : தப்பு … பண்ணிட்டம்பா தப்பு …. (உருகுகிறார்)

நக்கலாக,
ஜெயந்தன் : இப்பவும் தப்பு தப்பாதான் புரிஞ்சிக்கிட்டே, நான் உன் கிட்ட பணம் கொடுக்கப் போறேன்னு சொல்லவேயில்ல அதுக்குள்ள அவசரகுடுக்கையாட்டம்…

பணம் வராது என்று மிரண்டபடி..
தேவா : சரி நான் தான் தப்பு பண்ணிடேன்னு வெச்சுக்க …
ஜெயந்தன் : அட நானும் அத தாம்பா தான் சொல்றேன் …
தேவா : எந்த எழவோ இருக்கட்டும் … சரி பணம் கொடுக்க வரலை பின்ன எதுக்கு வந்தே ?

ஜெயந்தன் : அப்படி விவரமா கேளு… பணம் அடுத்த மாசம் தரலாம்னு யோசனைப் பண்ணி … அதை உன்கிங்ட்ட சொல்லத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்.

தேவா : அப்ப நீ பணம் குடுக்க வரலையா …
தேவா : நாமம் போட்டுடான்யா போட்டுடான் …
என்று புலம்புகிறார்

ஜெயந்தன் : மிஸ்டர் தேவா ரொம்ப புலம்பாதிங்க … உன் பணத்தை எண்ணி உன்கிட்ட கொடுத்திடுறேன்… ஆனா ஒரு விசயம் எனக்கு தெரிஞ்சாவனும்
தேவா : என்னப்பா தெரியனும் ?
ஜெயந்தன் : நீ இப்ப … இங்க… என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
தேவா : ம்… பாத்த தெரியல… முறுக்கு விக்கிறேன் முறுக்கு
ஜெயந்தன் : எங்க இன்னொரு தரம் சொல்லு பார்க்கலாம் என்ன விக்கிற ?
தேவா : கேட்டுத்தான் பாரேன் … முறுக்கு முறுக்கு
என்று கூவிகாட்டுகிறார்

ஜெயந்தன் : ரெண்டு முறுக்கு விக்கிறியா ?
தேவா : ரெண்டு முறுக்கு இல்லப்ப, மூனு முறுக்கு ரூவாய்கு மூனு முறுக்கு
ஜெயந்தன் : முறுக்கு தானே விக்கிறே, அப்பறம் ஏன் முறுக்கு முறுக்குன்னு ரெண்டு தரம் சொல்ற, முறுக்குன்னு சொல்லி வித்தா விக்காதா ? முறுக்கு முறுக்குன்னு அடுக்கி சொன்னா தான் விக்குமா ?
தேவா : யப்பா யப்பா… ஊரு உலகத்துல உள்ளவங்க எல்லாமே முறுக்கு முறுக்குன்னு தானே விப்பாங்க .. இது என்ன வில்லங்கமா இருக்கு ?
ஜெயந்தன் : சரி சரி இன்னொருதரம் சொல்லு போய்டுறேன்
‘விடமாட்டான் போல … எப்படியோ போய் தொலையிறேன் சொல்கிறானே’ என்று நினைத்த வடிவேலு. கூவி காட்டுகிறார்
தேவா : முறுக்கு… முறுக்கு… நெய்முறுக்கு… முறுக்கு வாங்கலையோ முறுக்கு … போதுமாப்பா ?… நீ கெளம்பு..
ஜெயந்தன் : என்னது கிளம்பனுமா … என்ன சொன்ன நெய்முறுக்கா ? எங்க ஒன்னு குடு தின்னு பார்கிறேன்

மனதில் அழுதபடி தேவா எடுத்து கொடுக்கிறார். ஜெயந்தன் வாங்கி கடித்துவிட்டு வேகமாக துப்புகிறார்.
ஜெயந்தன் : தூ .. இது நெய்முறுக்கா ?
தேவா : என்ன அப்படி கேட்டுப்புட்ட …. நெய் முறுக்கு இல்லாட்டி வேற என்ன முறுக்காம் ?
ஜெயந்தன் : இது நெய் முறுக்கு இல்ல … பொய் முறுக்கு
தேவா : என்னப்பு சொல்லுறிய …?
ஜெயந்தன் : அதான் பாத்தேனே … கலையில நீ செட்டியார் கடையில … ‘யோவ் செட்டி ..பாமாயில் அஞ்சு லிட்டுருரு.. பாத்து ஊத்து … ஒரு சொட்டு குறைஞ்சாலும் ஒனக்கு உடம்புல உயிரு தங்காது’ ன்னு சவுன்டு உட்டத
தேவா : பாத்துட்டான்யா பாத்துட்டான் …ஆமாப்பா … இந்த முறுக்கெல்லாம் பாமாயில்ல செஞ்சது தான் … ஒரே ஒரு கரண்டி மட்டும் தான் நெய் உத்தினேன். இப்ப என்ன செய்யனும்கிற…
ஜெயந்தன் : அப்ப எதுக்கு பாமாயில் முறுக்க .. நெய்முறுக்குன்னு பொய் சொல்லி விக்கிறே ?
தேவா : ஊரு ஒலகத்துல எல்லாரும் செய்யறத தாம்ப்பா நானும் செய்றேன் … உட்டுடுபா
ஜெயந்தன் : உடுறதா … நீ பாமாயில் முறுக்குன்னு கூவி விக்கிறத பாக்காம நான் எடத்த காலிபண்ண மாட்டேன்.
தேவா : நின்னுட்டான்யா …. நின்னுட்டான் … அப்படியெல்லாம் சொன்ன ஒருத்தனும் வாங்க மாட்டான்யா
ஜெயந்தன் : அப்ப பொய் சொல்லி பொழப்பு நடத்துற … இல்லே ?

தேவா பற்களை நரநர வென்று கடித்த படி.. முறுக்கு டின்னை எடுத்து தலைகீழாக ரோட்டில் முறுக்குகள் எல்லாவற்றையும் கொட்டி கோபமாக,
தேவா : கெடுத்துட்டான்யா … கெடுத்துட்டான் … எம் பொழப்ப கெடுத்துட்டான்
என்று சட்டைய கிழித்துக் கொள்கிறார்

அந்த நேரம் பார்த்து ஒரு மனநல மருத்துவமனை வேன்வர … ஜெயந்தன் கையை நீட்டி நிறுத்தி தேவாவை காட்டுகிறார்

ஜெயந்தன் : சார் பாருங்க … யாரோ முறுக்கு காரனை அடித்து துரத்திவிட்டு … எல்லாத்தையும் கொட்டிட்டு நிக்கிறான் … அவன் தான் புடிச்சிட்டு போங்க …

தேவா துள்ள துள்ள அள்ளிச் செல்கிறார்கள்

தேவா : நீ நல்ல இருப்பியா ? … பாவி பாவி
என்று கத்தியபடி இருக்க வேனில் திணிக்கபடுகிறார்

கீழே கிடந்த முறுக்கு ஒன்றை எடுத்து கடித்த ஜெயந்தன்.

ஜெயந்தன் : நல்லா இருக்கே … நெசமாவே நெய் முருக்குதான் … தேவா மிஸ்டர் தேவா

வேன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டிருந்தது

நன்றி -ஜெயந்தன்


நம்ம தேவாவின் ஆதி அருள் வாக்கு நிலையம்…

ஆகஸ்ட் 18, 2007

நீங்களும் மிக்க அதிஸ்டசாலிகள் ஆகலாம்???

(கிளி ஜோதிடமா அல்லது குரங்கு ஜோதிடமா…. )

nai

theva.tk அன்பர்களே!
கைரேகை, முகநாடி, எண்கணிதம், கிரகநிலை
உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் ‘நா’த்திருட்டி
எதுவானாலும் தெள்ளத்தெளிவாக சாதகம் இன்றியே
கணிக்கும் வல்லமை பெற்ற ‘அருள்வாக்குச் சித்தர்”(நம்ம தேவா) ஆதிவாசியின் கைங்கரியத்தில்
உங்கள் எதிர்காலத்தை அறிய வாருங்கள்…………………

  • ஆதி அருள்வாக்கு நிலையம். 
    வத்தளை,

  • Colombo,

  • SriLanka.

  • Tp:-94777317696 


teva என்னும் பெயரை thevaஆக மாற்று நம்ம தேவா…

ஆகஸ்ட் 17, 2007

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆனானப்பட்ட நம்ம ஐயன் திருவள்ளுவரே எண் கணித சோதிடம் பற்றிச் சொல்லியிருக்காராமே தெரியுமா? அவர் ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”னு சொல்லிட்டு போனாலும் போனார்; நம்ம ஆளுங்க அவரையே quote பண்ணிட்டாங்க…’பாத்தீங்களா, நம்ம ஐயன் திருவள்ளுவரே எங்க numerology பற்றிச் சொல்லியிருக்காராக்கும்’ அப்டின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க… பாவம்’பா…விட்டுருங்க.. உங்களுக்கு சப்போர்ட் வேணும்னா அதுக்காக இப்படியா?

எல்லா மட்டத்திலேயும் இந்த ‘வியாதி’ பரவியிருச்சு; பகுத்தறிவாளர்களாகட்டும், கை நாட்டுகளாக இருக்கட்டும். என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே அப்டின்கிற நினப்பு போல. வை.தண்ணிப்பால் தேவா ஆயிடரார்; அவ்வளவு எதுக்கு, எல்லா விஷயத்திலும் முற்போக்காளராக இருக்கும் கமல ஹாசன் ஏன் பெயரை மாத்திக்கிட்டாரென தெரியவில்லை.(இந்திக்காரர்களுக்குப் பரிச்சயமான பெயர் அது என்று சொன்னதாக நினைவு. சரியோ, தவறோ தெரியாது.) எனக்குக் கூட ஒருத்தர் பெயரை நான் மாத்திக்கிட்டா பெரிய ஆளா வந்திருவேன்னு சொன்னார்; அதுவும் teva அப்டிங்கிற பெயரை theva என்று மாத்திக்கச் சொன்னார். சாமி, teva அப்டிங்கிற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் (பேராவது அழகா இருக்கட்டுமேன்னு அப்பா பெரிய மனசு பண்ணி வச்சிருக்காரு.). அதோட, theva- அப்டிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா, என்னக் கேவலப்படுத்துறதின்னே முடிவெடுத்திட்டியான்னு கேட்டு விரட்டவேண்டியதாப் போச்சு!
சில சந்தேகங்களை மட்டும் உங்கள் முன் வைக்க ஆவல்.
1. பெயரை மாற்றுவதால் என்ன நடக்கிறது? (vibration அது இதுன்னு சொல்றாங்களோ?)
1. அந்த மாதிரி பெயரை மாற்றுவதால் (eg. teva -> theva ) என்ன ஆகிறது?
3. என் பெயரை மாற்றினாலாவது உச்சரிக்கப்படும் சத்தம் வேறுபடும். Murugan என்பதை Murugun என்று மாற்றுவதாக வைத்துக்கொண்டால், பழையபடி முருகன் என்றுதானே அந்த நபர் அழைக்கப்படுவார். பிறகு ஒலிமாற்றம் எப்படி ஏற்படும்? ஒலிமாற்றம் இல்லாவிட்டால் எழுத்துக்களை -spelling-யை மாற்றுவதால் என்ன பயன்?
4. முருகன் என்ற சாமியின் பெயரால் அழைக்கப்பட் வேண்டுமென்று பெயர் வைக்கப்பட்டு, பிறகு Murugun என்று அழைக்கப்பட்டால், அந்த முருகனின் மேலேயும் நம்பிக்கையில்லை; அவரையே ‘(ஏ)மாற்றி’ விடுகிறோம் என்று பொருளில்லையா?
5. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் மதிப்புகொடுத்தது எப்படி? (யாரோ ஒரு பிரான்ஸ் நாட்டு ‘மேதாவி’ கொடுத்ததாக ஒரு நண்பனும், இல்லை..இல்லை நம்ம சித்தர் ஒருத்தரு கொடுத்தார் என்று இன்னொருவனும் சொன்னார்கள்; எனக்குத் தெரியாது. ) யார் கொடுத்திருந்தாலும் ஏன் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தார்கள்? அப்படியானால் இந்த numerology-ன் மூலம் இங்கிலாந்தா?
6. உச்சரிப்பைப் பொருத்தே vibration இருக்கும். vibration-யைப் பொருத்து பலன்கள் இருக்கும் என்றால், எல்லோரும் ஒரே மாதிரியா உச்சரிக்கிறோம். என் பெயரே என்னென்ன பாடு படும் என்று எனக்குத்தான் தெரியும்! teva, theva, thiva, jova, சாம், சாமி, – தொலைபேசியில் என் பெயரைச் சொல்லி அடுத்த முனையில் இருப்பவரைப் புரிய வைக்க நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்!
7. ஆங்கிலமே தெரியாதவருக்கும், ஆங்கிலமே தெரியாத நாட்டில் இருப்பவர்களுக்கும் இந்த ஆங்கில மொழி சார்ந்த எண்கணிதம் எப்படி சரியாக இருக்கும்?
8. ஆங்கில முறையில் பெயரின் எழுத்துக்களை மாற்றினாலும் தமிழில் ஒரே மாதிரியாகவே உச்சரிக்கப்பட்டால் அதனால் என்ன வித்தியாசம் வரும்? பலன் என்ன மாறும்? சான்றாக, நம்ம முதல் தலை தன் பெயரை ஆங்கிலத்தில் tevaganthan என்று மாற்றிக்கொண்டுள்ளார். ஆனால், tevaganthan என்று ஆங்கிலத்தில் சொல்வது போலவேதான் theva என்ற பெயரையும் உச்சரிக்க முடியும். அப்படியானால் என்ன vibration changes வந்துவிடும்? பெயர் உச்சரிக்கப்படுவது ஒன்றாகவே இருப்பின், எதற்கு இந்த மாற்றம்?(இது 3-வது பாயிண்ட் மாதிரியே இருக்குல்ல? எட்டு என்றாலே இப்படித்தாங்க… இது எப்படி இருக்கு?)
9. எண்களுக்கு சில கணித மதிப்பு இதன் அடிப்படை விஷயம். இந்த கணித மதிப்புக்கு என்ன அடிப்படை? யார், எதற்காக, எப்படி, ஏன் இந்த மதிப்புகளை இந்த எழுத்துக்களுக்கு – ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே – கொடுத்தார்கள்?
10. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்கூட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து முடிச்சு போட்டு விடலாம். ஆனால் இந்த பிறந்த தேதிக்கும், பெயரின் கூட்டல் கழித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கலாம்; தெரிந்தவர்கள் கேள்விகள் கேட்டு கேள்விகளின் எண்களைக்கூட்டினால், அந்தக் கூட்டுத்தொகை மாறுமல்லவா? அந்த மாற்றங்களுக்குத் தனிப் பலன்கள் உண்டு. அவைகளை நமது நிலைய ஜோதிடர் உங்களுக்கு ஒரு தாயத்துடனும், ஒரு தகடும் வைத்து அனுப்புவார். தாயத்தை அணிந்து கொண்டு, தகட்டை வீட்டில் ஏதாவது ஓரிடத்தில் புதைத்து வைத்தாலோ எல்லா அஷ்டதேவிகளும் உங்களைத்தேடி ஓடி வருவார்கள்.

வேண்டுவோர் இதை வாசித்த 9 நாட்களுக்குள் ரூபாய் 236.34 (பாத்தீங்களா- கூட்டுத்தொகை 9 வருதா…?) அனுப்பவும். தபால் செலவு தனி. வழக்கமாய் பின்னூட்டம் இடுபவர்களுக்கு 18% தள்ளுபடி உண்டு.


Follow

Get every new post delivered to your Inbox.