குறுந்தகவல்(SMS)

ஆகஸ்ட் 16, 2007

நான் மூடன் அல்ல
இருந்தலும் கிளி ஜோசியம் பார்க்கிறேன்.
கிளியின் ஒரு நிமிட
விடுதலைக்காக!

கவிதைகளை வாசிப்பது மட்டுமல்ல
நேசிப்பதும் சுகம்தான்!-ஆம்
நான் நேசிக்கும் அழகான
கவிதை நீ!

உன்னைவிட்டு பிரியும்போது-நான்
தனியே பேசிக்கொள்கிறேன்.
என் நிழலுடன் அல்ல-உன்
நினைவுகளுடன்.

உன்னை கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன்-பின்பு
காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது-காதல்
நம் நட்பு மீது.

நான் ரோஜாவைப் போல்
அழகானவன் அல்ல-ஆனால்
என் மனம் ரோஜாவைவிட அழகானது;
ஏன் தெரியுமா?
அதில் நீ இருக்கிறாய்!


எனக்குளே ஒரு வெக்கம்

ஆகஸ்ட் 10, 2007

 ஏங்கி வந்த பொண்ணு ஒன்னு
தாங்கி வந்து அன்பு காட்டி
பாசம் தந்து பரிவு ஊட்டி
சோகம் நீக்கி துயர் நீக்கி
நிறைவு தந்து மகிழ்ச்சி தந்து
உள்ளம் மயக்கி எண்ணம் கவர்ந்த
என்னவளின் பெயரைச்சொல்ல
நானு நினைக்கும் போது
நாக்கு ஏனோ ஒட்டிகிச்சு!
வெட்கம் வந்து பத்திக்கிச்சு!


Follow

Get every new post delivered to your Inbox.